முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குமரி திமுக வின் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் மாவட்டத்தின் இரண்டு இடங்களில் நடந்தது 900 பேர் கைது

நீட்தேர்விலிருந்துதமிழகத்திற்கு விலக்கு கொரி கன்னியா குமரி மாவட்டத்தில் திமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மனிதநேய மக்கள் கட்சி விசிக பங்கேற்பு                                                                                        நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி திமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 27.07.2017 அன்று மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்க்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததால் தடையை மீறி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆயிர கணக்கான திமுக காங்கிரஸ் மனிதநேய மக்கள் கட்சி விசிக கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. சேலம் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோவையில் கைது செய்ய பட்டார்                                                                                                                         குமரி மாவட்டம்                                                                                                                            நீட்தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி குமரி மாவட்டத்தில்  நாகர் கோவில் தக்கலை ஆகிய இரண்டு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.                                                                                                                                                                 நாகர் கோவில்                                                                                                                                        நாகர் கோவிலில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். எம் எல்.ஆஸ்டின் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன். கேட்சன் சிவராஜ்,வக்கீல் உதய குமார் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன்.விசிக மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட ஏராமான திமுக காங்கிரஸ் மனிதநேய மக்கள் கட்சி விசிக கட்சியினர் மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடு பட்டனர்                                                                                                                                                                                             தக்கலை:-                                                                                                                        தக்கலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார் விஜய தரணி முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பலீலா ஆல்பன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸ் மாதவன் சைமன்.விசிக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயன் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் அசோகன் சாலமன் மனிதநேய மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் முகமது உவைஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.                         போலீசார் அனுமதி மறுக்க பட்ட நிலையில் இந்த போராட்டம் நடை பெற்றதால் எம்எல்ஏக்கள் உள்பட 890 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.                                                           -சுல்பிக்கர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குமரி எக்ஸ்பிரஸ் ஓர் அறிமுகம்

இந்த உலகில் வாழும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும் அது நாம் வாழும் சூழ் நிலை நம் எதிர்கால லட்சியம் கல்வி வேலை தொழில் விளையாட்டு போன்ற காரணிகளால் மாறு படுகிறது. ஆனால் நம் அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒரு விடயம் உள்ளது என்றால் அது நம் சொந்த ஊர் தான். நாம் பல லட்சியங்களை நிறைவு செய்து பல கோடிகளையும் சம்பாதித்து வேறு நகரத்திலோ நாட்டிலோ மாளிகை போன்ற வீட்டில் வசித்தாலும் நம் சொந்த ஊரில் குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று சந்தோஷமாக நம் வீட்டில் களித்த நாட்கள் ஒருபோதும் மறக்காது. அதிலும் இயற்க்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்ட மைந்தர்களுக்கு சொல்லவா வேண்டும். நாம் எங்கிருந்தாலும் நம் மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் செய்திகள் அறிய வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் நம் மாவட்ட நிகழ்ச்சிகள் செய்திகளை பற்றி உங்களுக்கு தெரிய படுத்தும் ஊடகமாக இந்த பக்கம் செயல் படும் மேலும் நம் மண்ணின் இளம் எழுத்தாளர்களின் கட்டுரைகள் படைப்புகள் இங்கே பிரசுரிக்கபடும்.

அரசியல் அறிவோம்

அரசியலா ! அது சாக்கடை.    அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம்  கட்சியில் சேர போறியா முட்டாளா நீ  நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற     அத்தனைபேரும் அயோக்கியர்கள்  உனக்கு வேற வேலை இல்லையா  நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே                               இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான்...

சுதந்திர தின சிறப்புக் கட்டுரை இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975) ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம். குஞ்சாலி மரைக்காயர்...