முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு , தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு

குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு   தமுமுக  உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு 
அக்டொபர்  11,2017,குளச்சல்
                       கன்னியா குமரி மாவட்டம் குளச்சலில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து கட்சி மற்றும் பொது மக்கள் இணைந்து கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்
                     எழில் கொஞ்சும் கன்னியா குமாரி மாவட்டத்தில்  அழகான கடற்கரை கொண்ட ஊர் குளச்சல். இங்கே சிறப்பு வாய்ந்த கோயில்கள் பள்ளி வாசல்கள் பள்ளி கூடங்கள் மருத்துவமனைகள் இருந்து வருகிறது. ஆனால் இந்த ஊரின் அழகையும் பெருமையையும் சுகாதாரத்தையும் கெடுக்கும் விதமாக குளச்சல் நகராட்சியின் பணிகள் இருந்து வருவது மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. குளச்சல் VKP பள்ளி அரசு மருத்துவமனை  காவல் நிலையம் பஸ் நிலையம் பீச் ரோடு என்று எங்கு பார்த்தாலும் குப்பை மயமாகவே உள்ளது. இது இந்த பகுதியில் ஒரு விதமான துற நாற்றத்தையும் நோய்களை பரப்பும் கொசுக்களையும் உற்பத்தி செய்கிறது . மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணனிக்கான மக்கள் பாதிக்க பட்ட நிலையில் குளச்சல் நகராட்சியின் சுகாதார சீர் கேடு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது  டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுக்கள் ஏற்பட நூறு  வாய்ய்ப்புள்ளது .
                                                       
இது இன்று நேற்று ஏற்பட்ட பிரச்சனையல்ல கடந்த 13 வருடங்களாக குளச்சல் நகராட்சி இந்த குப்பை அகற்றும்  விஷயத்தில் மிகப்பெரிய அளவில் பின் தங்கியுள்ளது பல கட்சிகளும் இது சம்பந்தமாக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்துள்ளது
        இதை பற்றி குளச்சல் நகர மக்களிடம் கேட்டபோது பல முறை இந்த நகராட்சி நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக கோரிக்கை வைத்த பிறகும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமுமுக உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், க  பல கட்ட போராட்டங்களை இதற்கு முன்பாக முன்னெடுத்தனர்

                                       
தற்போது நகராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால்  நிலைமை மிகவும் மோசமாகி விட்டது எனவே இது சம்பந்தமாக குளச்சல் வியாபாரிகள் சங்கம் திமுக காங்கிரஸ் மனிதநேய மக்கள் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 8.10.2017  அன்று  நடை பெற்றது அதில் இன்று 11.10.2017 குளச்சலில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்க பட்டிருந்தது அதனடிப்படையில் இன்று குளச்சலில் முழு கடை அடைப்பு  நடத்த பட்டதோடு பொது  மக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
                                                                                                                         H.SULBIKAR

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குமரி எக்ஸ்பிரஸ் ஓர் அறிமுகம்

இந்த உலகில் வாழும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும் அது நாம் வாழும் சூழ் நிலை நம் எதிர்கால லட்சியம் கல்வி வேலை தொழில் விளையாட்டு போன்ற காரணிகளால் மாறு படுகிறது. ஆனால் நம் அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒரு விடயம் உள்ளது என்றால் அது நம் சொந்த ஊர் தான். நாம் பல லட்சியங்களை நிறைவு செய்து பல கோடிகளையும் சம்பாதித்து வேறு நகரத்திலோ நாட்டிலோ மாளிகை போன்ற வீட்டில் வசித்தாலும் நம் சொந்த ஊரில் குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று சந்தோஷமாக நம் வீட்டில் களித்த நாட்கள் ஒருபோதும் மறக்காது. அதிலும் இயற்க்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்ட மைந்தர்களுக்கு சொல்லவா வேண்டும். நாம் எங்கிருந்தாலும் நம் மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் செய்திகள் அறிய வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் நம் மாவட்ட நிகழ்ச்சிகள் செய்திகளை பற்றி உங்களுக்கு தெரிய படுத்தும் ஊடகமாக இந்த பக்கம் செயல் படும் மேலும் நம் மண்ணின் இளம் எழுத்தாளர்களின் கட்டுரைகள் படைப்புகள் இங்கே பிரசுரிக்கபடும்.

அரசியல் அறிவோம்

அரசியலா ! அது சாக்கடை.    அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம்  கட்சியில் சேர போறியா முட்டாளா நீ  நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற     அத்தனைபேரும் அயோக்கியர்கள்  உனக்கு வேற வேலை இல்லையா  நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே                               இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான்...

சுதந்திர தின சிறப்புக் கட்டுரை இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975) ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம். குஞ்சாலி மரைக்காயர்...