முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குமரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

 ஜுன்.2.2021. கன்னியாகுமரி மாவட்டம் தமுமுக சார்பாக பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கெதிராக வீடுகளின் முன் கண்டன பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

          கடந்த 2019 ம் வருடம் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து அகதிகளாக 2014 ஆம் ஆண்டுக்கு முன்னால் வந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக சட்ட திருத்தம் செய்ய பட்டது.இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. மத சார்பற்ற நாட்டில் மத அடிப்படையில் சட்டம் கொண்டு வருவது மத்திய அரசின் மதவெறிக்கு சான்றாகும் என்று பல் வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர்.நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடை பெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக வினர் புகுந்ததால் கலவரம் ஏற்ப்பட்டு பலர் உயிழந்தனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் போராட்டங்கள் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் சட்டீஸ்கர் உட்பட 5 மாநிலங்களில் 13 மாவட்டங்களில் இருக்கும் அகதிகள் குடியுரிமை பெற CAA சட்டத்தின் படி விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. எனவே கொரோனா காலத்திலும் மக்கள் உயிருக்கு பாது காப்பில்லாத நெருக்கடியான சூழ்நிலையிலும் மத்திய அரசு CAA சட்டத்தை அமுல் படுத்துவதை கண்டித்து மாநிலம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் வீடுகளின் முன் முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளி விட்டு பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெறும் என்று அதன் தலைவர் ஜவாஹிருல்லாMLA அறிவிப்பு செய்திருந்தார்.எனவே தமிழ்நாடு முழுவதும் இன்று ஜுன் 2 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



              இதனை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியா குமரி மாவட்டத்தில் திங்கள் நகரில் கிளைத்தலைவர் நிஷாது தலைமையில் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சகாபுதீன் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணை செயலாளர் சுல்பிக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனாவினால் இந்தியா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கிறது. தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜனை மக்களுக்கு கொடுப்பதில் மோடி அரசு தோல்வியை சந்திக்கிறது. பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கிறது கொரோனாவை கட்டுபடுத்த மத்திய அரசிடம் ஆக்க பூர்வமான எந்த திட்டங்களும் இல்லாத நிலையில் மோடி பதவி விலக வேண்டுமென்று இந்தியா முழுவதும் கோரிக்கை வலுக்கிறது.எனவே தன்னுடைய தோல்வியை மறைக்க மதரீதியாக மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேட மோடி முயல்கிறார்முஸ்லிம்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மோடி அநீதி இழைத்து விட்டார் எனவே பாஜக வின் மத வெறியை கண்டித்து தமுமுக தலைவர் போராட்டம் அறிவித்ததின் பெயரில் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்வது உட்பட பல்வேறு நிவாரண பணிகளை செய்து வருவதின் மத்தியிலும் இன்று குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடை பெறுகிறது என்று மமக மாவட்ட செயலாளர் சகாபுதீன் தெரிவித்தார். தமுமுக மாவட்ட தலைவர் செய்யது அலி திருவிதாங்கோட்டிலும் தமுமுக மாவட்ட செயலாளர் சித்தீக் அழகிய மண்டபத்திலும் மாவட்ட பொருளாளர் ஃபைரோஸ் காஜா குளச்சலிலும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலம் தேங்காய் பட்டணம் தக்கலை வடக்கு சூரங்குடி மேக்கா மண்டபம் இரவிபுதூர்கடை போன்ற ஊர்களிலும் மக்கள் வீடுகளின் முன்போராட்டத்தில் ஈடுபட்டனர்.











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குமரி எக்ஸ்பிரஸ் ஓர் அறிமுகம்

இந்த உலகில் வாழும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும் அது நாம் வாழும் சூழ் நிலை நம் எதிர்கால லட்சியம் கல்வி வேலை தொழில் விளையாட்டு போன்ற காரணிகளால் மாறு படுகிறது. ஆனால் நம் அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒரு விடயம் உள்ளது என்றால் அது நம் சொந்த ஊர் தான். நாம் பல லட்சியங்களை நிறைவு செய்து பல கோடிகளையும் சம்பாதித்து வேறு நகரத்திலோ நாட்டிலோ மாளிகை போன்ற வீட்டில் வசித்தாலும் நம் சொந்த ஊரில் குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று சந்தோஷமாக நம் வீட்டில் களித்த நாட்கள் ஒருபோதும் மறக்காது. அதிலும் இயற்க்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்ட மைந்தர்களுக்கு சொல்லவா வேண்டும். நாம் எங்கிருந்தாலும் நம் மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் செய்திகள் அறிய வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் நம் மாவட்ட நிகழ்ச்சிகள் செய்திகளை பற்றி உங்களுக்கு தெரிய படுத்தும் ஊடகமாக இந்த பக்கம் செயல் படும் மேலும் நம் மண்ணின் இளம் எழுத்தாளர்களின் கட்டுரைகள் படைப்புகள் இங்கே பிரசுரிக்கபடும்.

அரசியல் அறிவோம்

அரசியலா ! அது சாக்கடை.    அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம்  கட்சியில் சேர போறியா முட்டாளா நீ  நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற     அத்தனைபேரும் அயோக்கியர்கள்  உனக்கு வேற வேலை இல்லையா  நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே                               இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான்...

சுதந்திர தின சிறப்புக் கட்டுரை இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975) ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம். குஞ்சாலி மரைக்காயர்...