முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குமரியில் அதிகரிக்கும் விவகாரத்து வழக்குகள்

படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில் தான் விவாகரத்து வழக்குள் அதிகம் பதிவு செய்யப்படுகிறது என்று நீதிபதி ஜாண்.ஆர்.டி.சந்தோசம் பேசினார்.


நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு, பள்ளி தாளாளர் தாமஸ் பவ்வத்து பரம்பில் தலைமை தாங்கினார். வக்கீல் ஜெஸ்டின்ராஜ், பெற்றோர்– ஆசிரியர் கழக தலைவர் சேகர் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். முகாமில், மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண்.ஆர்.டி.சந்தோசம், சுவாமி பத்மேந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகர்ச்சியில், நீதிபதி.ஜாண்.ஆர்.டி.சந்தோசம் பேசும்போது
 சுதந்திர நாட்டில் நமக்கான கடமைகளும், பொறுப்புகளும் நிறைய உள்ளது. அவை, சுய பொறுப்புணர்வு, சமூக பொறுப்புணர்வு, நாட்டு மீதான பொறுப்புணர்வு என்பதாகும்.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 42 நூலகங்கள் தான் உள்ளது. ஆனால் அதைவிட அதிகமாக எண்ணிக்கையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுவினால் மட்டுமே 3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மதுவினால் சமூகத்தில் ஏற்படும் குற்றங்களில் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

மேலும், 10, 11, 12–ம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவிகளுக்கு இது ஒரு முக்கிய காலகாட்டமாகும். அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஏராளமான வி‌ஷயங்கள் நடக்கலாம். ஆனால் அவர்களின் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும். ஸ்மார்ட்போன் தேவை என்பது தற்போது அத்தியவசியமாகி விட்டது. அதன்மூலம் நல்ல வி‌ஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். தீய வி‌ஷயங்களை கற்க பயன்படுத்தக்கூடாது.


தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், இங்கு தான் அதிகமான விவாகரத்து வழக்குகளும் பதிவுசெய்யப்படுகிறது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. தற்போது வரையில் 900 விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே சகிப்புதன்மை, விட்டுக்கொடுத்தல், அமைதியை கடைப்பிடிப்பதன் மூலம் விவாகரத்துகளை தவிர்க்கவேண்டும்.


 ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவ–மாணவிகள் சமூகத்தில் நல்லதொரு மனிதராக வளர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். மேலும், அடிப்படை சட்டங்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் அவற்றை பற்றி விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்கவேண்டும்.என்று பேசினார்



இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் லிசபெத், துணை முதல்வர் அஜின்ஜோஸ், ஆசிரிய–ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குமரி எக்ஸ்பிரஸ் ஓர் அறிமுகம்

இந்த உலகில் வாழும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும் அது நாம் வாழும் சூழ் நிலை நம் எதிர்கால லட்சியம் கல்வி வேலை தொழில் விளையாட்டு போன்ற காரணிகளால் மாறு படுகிறது. ஆனால் நம் அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒரு விடயம் உள்ளது என்றால் அது நம் சொந்த ஊர் தான். நாம் பல லட்சியங்களை நிறைவு செய்து பல கோடிகளையும் சம்பாதித்து வேறு நகரத்திலோ நாட்டிலோ மாளிகை போன்ற வீட்டில் வசித்தாலும் நம் சொந்த ஊரில் குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று சந்தோஷமாக நம் வீட்டில் களித்த நாட்கள் ஒருபோதும் மறக்காது. அதிலும் இயற்க்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்ட மைந்தர்களுக்கு சொல்லவா வேண்டும். நாம் எங்கிருந்தாலும் நம் மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் செய்திகள் அறிய வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் நம் மாவட்ட நிகழ்ச்சிகள் செய்திகளை பற்றி உங்களுக்கு தெரிய படுத்தும் ஊடகமாக இந்த பக்கம் செயல் படும் மேலும் நம் மண்ணின் இளம் எழுத்தாளர்களின் கட்டுரைகள் படைப்புகள் இங்கே பிரசுரிக்கபடும்.

அரசியல் அறிவோம்

அரசியலா ! அது சாக்கடை.    அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம்  கட்சியில் சேர போறியா முட்டாளா நீ  நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற     அத்தனைபேரும் அயோக்கியர்கள்  உனக்கு வேற வேலை இல்லையா  நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே                               இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான்...

சுதந்திர தின சிறப்புக் கட்டுரை இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975) ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம். குஞ்சாலி மரைக்காயர்...