முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறுபான்மை கிருஸ்தவர்கள் பாஜகவில் பயணிக்க முடியாது : பாஜக மாநில மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து விலகல்

சென்னை 21.10.2017                                          சிறுபான்மை கிருஸ்தவர்கள் பாஜகவில் பயணிக்க முடியாது : பாஜக மாநில மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து விலகல்          சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.வில் நீடிக்க முடியாது என்று தெரிவித்துள்ள, அக் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளருமான ஜெமிலா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.     ஜெமிலா அவர்கள் பாஜக கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்தாலும் சில விஷயங்களின் கட்சியின் செயல் பாடுகள் அதிருப்தி அளிப்பதாக வெளிப்படையாகவே முக நூலில் விமர்சிப்பார் அவ்வகையில்  விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய மோடி அரசாங்கத்தை சீண்டுவதாக பல வசனங்கள் இருப்பதை காரணம் காட்டி பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை உட்பட பலரும் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயை விமர்சித்து வந்தனர் சம்பந்த பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும்  மிரட்டி ...

அரசியல் அறிவோம்

அரசியலா ! அது சாக்கடை.    அரசியலா அது அயோக்கியனின் கடைசி புகலிடம்  கட்சியில் சேர போறியா முட்டாளா நீ  நீ ஒருத்தன் தான் குறை அரசியல் பண்ணி நாட்டை காப்பாத்த போற     அத்தனைபேரும் அயோக்கியர்கள்  உனக்கு வேற வேலை இல்லையா  நீ கட்சியில் சேர்ந்துட்டியா இனிமேல் கோடியா கோடியா சம்பாதிக்கலாமே                               இவை எல்லாம் சம கால மக்களிடம் அரசியல் சார்ந்த புரிதல்கள் வினாக்களும் விடைகள் உண்மை தான் நிகழ் கால அரசியலை பார்த்து பழகிய மக்களின் நியாயமான சிந்தனைகள் தான் இது ஆனாலும் ஒரு தேசத்தின் அடிப்படையை தீர்மானிக்கும் தேசத்தின் எதிர் காலத்தை கட்டமைக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வார்த்தையாக தான் இருக்கிறது அரசியல். அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இப்படியான ஒரு வார்த்தை இன்று அயோக்கியர்களை அடையாள படுத்தும் சொல்லாகவும் மக்களின் வெறுப்பிற்குள்ளான வார்த்தையாகவும் மாறியதன் காரணம் அரசியல் அறியாத அரசியல்வாதிகளால் தான்...

குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு , தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு

குளச்சலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் மற்றும் முழு கடையடைப்பு     தமுமுக  உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்பு  அக்டொபர்  11,2017,குளச்சல்                        கன்னியா குமரி மாவட்டம் குளச்சலில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து கட்சி மற்றும் பொது மக்கள் இணைந்து கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்                      எழில் கொஞ்சும் கன்னியா குமாரி மாவட்டத்தில்  அழகான கடற்கரை கொண்ட ஊர் குளச்சல். இங்கே சிறப்பு வாய்ந்த கோயில்கள் பள்ளி வாசல்கள் பள்ளி கூடங்கள் மருத்துவமனைகள் இருந்து வருகிறது. ஆனால் இந்த ஊரின் அழகையும் பெருமையையும் சுகாதாரத்தையும் கெடுக்கும் விதமாக குளச்சல் நகராட்சியின் பணிகள் இருந்து வருவது மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. குளச்சல் VKP பள்ளி அரசு மருத்துவமனை  காவல் நிலையம் பஸ் நிலையம் பீச் ரோடு என்று எங்கு பார்த்தாலும் குப்பை மயமாகவே உள்ளது. இது இந்த பகுதியில் ஒரு வி...

பொன் .ராதா கிருஷ்ணனை அசிங்க படுத்திய வெங்கய்யா நாயுடு.

                                      விழா மேடையில் வெங்கய்ய நாயுடுவுக்கு சிறப்பு செய்ய வந்த பொன்னாரை கேவல படுத்திய  வெங்கய்ய நாயுடு, எல்லாம் ஜாதி வெறி , பாஜக விலிருக்கும் பிற்படுத்தப்பட்ட நாடார் சமூக மக்களே சிந்தியுங்கள், வெளியே தான் இவர்களின்  நாமெல்லாம் இந்துக்கள் என்ற வேஷம் உள்ளே பக்கா ஜாதி வெறி

சுதந்திர இந்தியாவின் அடிமைத்தனம்

 குமரி எக்ஸ்பிரஸ் வாசகர்கள் அத்தனைபேருக்கும் 71 வது சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்,                                             நம் நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்த்து விட்டோம் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நாம் கொடியேற்றி இனிப்பு வழங்கி நண்பர்கள் உறவினர்களோடு வாழ்த்துக்களை பரிமாரிக் கொண்டு சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறோம் ஆனாலும் நாம் அனைவரும் நமக்கு நாமே கேட்டு கொள்கிற கேள்வி நாம் இந்த சுதந்திரத்தை உண்மையிலேயே அனுபவிக்கிறோமா ? சுதந்திரம் என்றால் என்ன? அடிமை இந்தியாவிற்கும் சுதந்திர இந்தியாவிற்குமான வேறுபாடு என்ன?  இது போன்ற பல கேள்விகளுக்கு நமக்கே விடை தெரியம் ஆனாலும் இதை நாம் வெளியே சொன்னால் நம்மை தேசத்திற்கு எதிராக பேசுகிறார்கள் என்று குற்றம் சுமத்தி நம்மை இந்த தேசத்தின் எதிரிகளாக சித்தரிப்பதற்க்கே ஒரு கூட்டம் இயங்கி கொண்டிருக்கிறது அவர்களின் போலியான ...

சுதந்திர தின சிறப்புக் கட்டுரை இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!

இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975) ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம். குஞ்சாலி மரைக்காயர்...

குமரியில் அதிகரிக்கும் விவகாரத்து வழக்குகள்

படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில் தான் விவாகரத்து வழக்குள் அதிகம் பதிவு செய்யப்படுகிறது என்று நீதிபதி ஜாண்.ஆர்.டி.சந்தோசம் பேசினார். நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு, பள்ளி தாளாளர் தாமஸ் பவ்வத்து பரம்பில் தலைமை தாங்கினார். வக்கீல் ஜெஸ்டின்ராஜ், பெற்றோர்– ஆசிரியர் கழக தலைவர் சேகர் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். முகாமில், மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண்.ஆர்.டி.சந்தோசம், சுவாமி பத்மேந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகர்ச்சியில், நீதிபதி.ஜாண்.ஆர்.டி.சந்தோசம் பேசும்போது  சுதந்திர நாட்டில் நமக்கான கடமைகளும், பொறுப்புகளும் நிறைய உள்ளது. அவை, சுய பொறுப்புணர்வு, சமூக பொறுப்புணர்வு, நாட்டு மீதான பொறுப்புணர்வு என்பதாகும். தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 42 நூலகங்கள் தான் உள்ளது. ஆனால் அதைவிட அதிகமாக எண்ணிக்கையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுவினால் மட்டுமே 3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மதுவினால் சமூகத்தி...

குமரி திமுக வின் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் மாவட்டத்தின் இரண்டு இடங்களில் நடந்தது 900 பேர் கைது

நீட்தேர்விலிருந்துதமிழகத்திற்கு விலக்கு கொரி கன்னியா குமரி மாவட்டத்தில் திமுக சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மனிதநேய மக்கள் கட்சி விசிக பங்கேற்பு                                                                                        நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி திமுக சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 27.07.2017 அன்று மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்க்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததால் தடையை மீறி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆயிர கணக்கான திமுக காங்கிரஸ் மனிதநேய மக்கள் கட்சி விசிக கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. சேலம் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோவையில் கைது செய்ய பட்டார்             ...

கணவன் மனைவி பரிதாபங்கள்

#படித்ததில்_பிடித்தது..😃😃😃 சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த மனைவி, உதவிக்குக் கணவனை அழைத்தார்.... பலமுறை அழைத்தும் பதில் இல்லை. உள்ளே சென்று பார்த்தால்..., படுக்கையில் அலுவலகக் கோப்புகள், மடிக்கணினி இரண்டும் மடியில் கிடக்க அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். இடுப்பில் செருகியிருந்த அவளுடைய  கைபேசியை எடுத்துப் பார்த்தவாறே கணவனின் அருகில் சென்று.., அவர் தலைமுடியில் விரல் விட்டு மென்மையாகப் பற்றினார். அடுத்த நொடி, "பளார்" என்ற சத்தம். அறை விழுந்த கன்னத்தைப் பிடித்தபடி திருதிரு வென விழித்த கணவனிடம் தன் கைபேசியின் "Whatsapp"பக்கத்தை மனைவி காட்டினார். கணவன் பெயருக்குக் கீழே, "last seen 1 minute ago"-என்றிருந்தது. #டெக்னாலஜி_இம்புரூவ்மெண்ட்.....

குமரி எக்ஸ்பிரஸ் ஓர் அறிமுகம்

இந்த உலகில் வாழும் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும் அது நாம் வாழும் சூழ் நிலை நம் எதிர்கால லட்சியம் கல்வி வேலை தொழில் விளையாட்டு போன்ற காரணிகளால் மாறு படுகிறது. ஆனால் நம் அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒரு விடயம் உள்ளது என்றால் அது நம் சொந்த ஊர் தான். நாம் பல லட்சியங்களை நிறைவு செய்து பல கோடிகளையும் சம்பாதித்து வேறு நகரத்திலோ நாட்டிலோ மாளிகை போன்ற வீட்டில் வசித்தாலும் நம் சொந்த ஊரில் குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று சந்தோஷமாக நம் வீட்டில் களித்த நாட்கள் ஒருபோதும் மறக்காது. அதிலும் இயற்க்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்ட மைந்தர்களுக்கு சொல்லவா வேண்டும். நாம் எங்கிருந்தாலும் நம் மாவட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் செய்திகள் அறிய வேண்டுமென்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் நம் மாவட்ட நிகழ்ச்சிகள் செய்திகளை பற்றி உங்களுக்கு தெரிய படுத்தும் ஊடகமாக இந்த பக்கம் செயல் படும் மேலும் நம் மண்ணின் இளம் எழுத்தாளர்களின் கட்டுரைகள் படைப்புகள் இங்கே பிரசுரிக்கபடும்.